பட்டுப்புழு: தாக்குதல்-மேலாண்மை

பட்டுப்புழு ஊசி ஈ தாக்குதலும் மேலாண்மையும் மல்பெரி பட்டுப்புழு வளர்ப்பில் ஊசி ஈ என்ற ஒரு வகைப் பூச்சியினால் தாக்குதலால் அதிக பொருளாதார இழப்பு ஏற்படுகின்றது. ஒவ்வொரு 100 முட்டை (குவியல்) எண்ணிக்கை கொண்ட புழு வளர்ப்பிற்கும் சராசரியாக 10 கிலோ வரை பட்டுக்கூடு மகசூல் இழப்பு  உண்டாகிறது.

            ஊசி ஈயின் தாக்குதல் குறிப்பாக மழைக்காலங்களில் அதிகமாகக் காணப்படுகின்றது. இத்தகைய ஊசி ஈயானது டாக்னிட் வகையைச் சார்ந்தது.
ஊசி ஈயின் வாழ்க்கைச் சுழற்சி

            ஊசி ஈயின் மொத்த வாழ் நாட்கள் 14 முதல் 18 நாட்களாகும். இந்த ஊசி முட்டைப்பருவம் புழுப் பருவம். கூட்டுப்புழுப் பருவம், வளர்ச்சியடைந்த ஈ வருவம் ஆகும். நன்கு வளர்ச்சியடைந்த ஈ கரிய சாம்பல் நிறமுடையதாக இருக்கும். சாதாரண ஈயைவிட சற்று அளவில் பெரியதாக இருக்கும். பெண் ஈ தன் வாழ்நாளில் சுமார் 400 முதல் 500 முட்டைகள் வரை இடுகின்றது மற்றும் இது தோராயமாக ஒரு முட்டைக்குவியலை அழிக்கும் திறன் கொண்டது. ஒரு ஈயானது 2 அல்லது 3 முட்டைகளை பட்டுப்புழுவின் மீது மேற்புறம்  மற்றும் இரு புறங்களில் இடும். இரண்டு நாட்களில் முட்டையிலிருந்து புழுக்கள் வெளிவந்து பட்டுப்புழுவின் தோலை துளைத்து உட்செல்லும், ஈயின் புழுப்பருவம் 4 முதல் 6 நாட்களாகும். நன்கு வளர்ச்சியடைந்த புழுக்கள் பட்டுப்புழுக்களிலிருந்து வெளிவந்து கூட்டுப்புழுவாக மாறும். கூட்டுப்புழுப் பருவம் 8 முதல் 12 நாட்கள் ஆகும்.

Pest Management Silkworm Silk worm Pest Management

  ஊசி ஈயின் முட்டை மஞ்சள் கலந்த வெண்மை நிறமுடையது. 2 லிருந்து 3 நாட்களில் முட்டையிலிருந்து புழுக்கள் வெளிவரும். அப்புழுக்கள் பட்டுப்புழுவின் உடலை துளைத்துக்கொண்டு உள்ளே நுழைந்துவிடும். ஊசி ஈ துளைத்துச் சென்ற  இடத்தில் பட்டுப்புழுவின் மீது ஒரு கரிய புள்ளி  ஏற்படும். புழு உள்ளே வளர, வள கரும்புள்ளியும்  பெரியதாகிக் கொண்டே வந்து ஒரு கரிய வடுவாக  ஆகிவிடுகின்றது. பட்டுப்புழுவின் தோலின் கீழேயே முதல் இரண்டு பருவங்களும் வாழ்கின்றன. மூன்றாம் பருவப்புழு நகர்ந்து பட்டு உற்பத்தியாகும் சுரப்பியைத் தவிர மற்ற அனைத்துப் பகுதிகளையும் தின்று விடும். நன்கு வளர்ந்த பின் புழு தன் வாயில், உள்ள கொக்கி போன்ற உறுப்புக்களால், பட்டுப்புழுவை துளைத்துக்கொண்டு வெளிவருகிறது.

Pest Management Silkworm Silk worm Pest Management

           வெளியேறிய புழுக்கள் வளர்ப்பறையிலுள்ள இருட்டான பகுதிக்கு சென்று சுவர் ஓரங்களிலுள்ள துளைகளில் கூட்டுப் புழுவாக மாறும். கூட்டுப்புழுவின் தோற்றம் சற்றே நீண்டசதுரமாகவும், செம்பழுப்பாகவும் இருக்கும். இதன் நிறம் அடர் பழுப்பிலிருந்து, கரிய நிறமாக மாறும். இவற்றிலிருந்து வெளி வந்த ஊசி ஈக்கள் 5 முதல் 6 நாட்கள் வரை வாழும். மேலும் இவை 4 கி.மீ தூரம் வரை பறக்கும் திறன் கொண்டதாகும்.
பட்டுப்புழுவின் உடலில் கரிய புள்ளி ஏற்படுதல், ஊசிப் புழு பட்டுப்புழுவின் உறுப்புகளைத் துளைத்துக் கொண்டு வருவதால் பட்டுப்புழுக்கள் இறந்துவிடுதல் மற்றும் ஊசிப் புழுக்களால் துளைக்கப்பட்ட பட்டுக்கூடு போன்றவற்றால் ஊசி ஈயின் தாக்குதலை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

ஊசி ஈ நன்கு வளர்ந்த 4 அல்லது 5வது பருவப் பட்டப்புழுக்களைத் தாக்குதின்றது. பட்டுப்புழுக்கள் 3.4 அல்லது 5வது பருவத்தின் தொடக்கத்தின் தாக்கப்பட்டால் கூடு கட்டுவதற்கு முன்பே பட்டப்புழுவின் உடலைத் துளைத்துக் கொண்டு புழு வெளிவருகின்றது. இதனால் பட்டுப்புழுக்கள் கொல்லப்படுகின்றன. 5வது பருவத்தின் கடைசியில் ஊசி ஈயின் தாக்குதல் ஏற்பட்டால் பட்டுப்புழு மிகவம் வலிவுற்ற கூட்டினைக் கட்டும். ஊசிப்புழு பட்டுக்கூட்டுகளை விட்டு வெளி வருவதால் துளைக்கப்பட்ட கூடு ஏற்படுகின்றது. இவற்றை நூற்பது மிகவும் கடினம்.
ஊசி ஈயினைக் கட்டுப்படுத்தும்  முறைகள்

  • ஊசி ஈயினால் தாக்கப்பட்ட பட்டுப்புழுக்கள், கீழே விழுந்த ஊசிப்புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்களை சேகரித்து அழித்துவிடவேண்டும்.
  • ஊசி ஈயினால் துளைக்கப்பட்ட பட்டுக்கூடுகளை பிரித்தெடுத்து அவற்றை பட்டுக்கூடுகளின் கழிவுகளோடு சேர்த்து எரித்துவிடவேண்டும்.
  • பட்டுப்புழுக்களின் வளர்ப்பறையில் சுவர் ஓரங்களில் துளைகள் இல்லாமல் பாதுகாக்கவேண்டும்.
  • ஊசி ஈக்கள் வளர்ப்பறையனுள் நுழைவதை தடுக்க வளர்ப்பறையின் சன்னல் மற்றும் கதவுகளில் வலை அடிக்க வேண்டும். இதனால் ஊசி ஈக்கள் கூட்டுப்புழுக்கள் ஆகாமல் தடுக்க முடியும்.
  • ஊசி ஈக்கள் முட்டை இடுவதைத் தடுக்க வளர்ப்புத் தட்டுக்களின் மேல் நைலான் வலைகொண்டு மூடவேண்டும்.
  • பட்டுப்புழுக்களின் கூடுகளை துணிப்பைகளில் எடுத்துச்செல்லவேண்டும்.
  • பட்டுப்புழுக்களின் கூடுகளை எடுத்துச் செல்லுமுன் ஊசி ஈயினால் துளைக்கப்பட்ட பட்டுப்கூடுகளை பிரித்தெடுப்பதன் மூலம் ஊசி ஈக்கள் மேலும் பரவாமல் தடுக்க முடியும்.
  • வளர்ப்பறைகளுக்கு முன்னர் ஒரு முன்னறையை அமைப்பது ஊசி ஈ நேரடியாக நுழையாமல் தவிர்க்க உதவும். விவசாயிகளும் ஒரே நேரத்தில் புழு வளர்க்காமல் விடுவது ஊசி பெருக்கத்தை தடுக்க உதவும்.
  • தாக்குதல் அதிகம் உள்ள பகுதிகளில் அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் புழு வளர்க்காமல் விடுவது ஊசி ஈ பெருக்கத்தைத் தடுக்க உதவும்.
  • உணவுக்கான இலைகளை, தண்டுகளை வளர்ப்பறைக்குள் எடுத்து செல்லும்போது ஊசி ஈ அதனுடன் செல்லாமல் இருக்கக் கவனம் செலுத்தவேண்டும்.
  • பட்டுக்கூடுகளை அங்காடியில் விற்ற பிறகு அதனை எடுத்துச்சென்ற கோணிப்பைகளை பூச்சி மருந்து கரைசலில்  முக்கி எடுக்கவேண்டும்.
  • பட்டுக்கூடு அறுவடைக்குப் பின் கோழிகளை வளர்ப்பாறைகளில் விடுவது மீதமுள்ள ஊசி புழுக்களையும் அழிக்க உதவும்.
  • ஊசி ஈயினை கவரும் மாத்திரையை 1 லிட்டர் தண்ணீரில் 2 மாத்திரைகள் வீதம் கரைத்து அந்தக் கரைசலை வளர்ப்பறையினுள் சன்னல் மற்றும் கதவருகே வைத்து தாய் பூச்சியை கவர்ந்து அழிக்கவும். பட்டுப்புழுவின் மூன்றாவது பருவத்திலிருந்து இம்முறையைப் பயன்படுத்தவேண்டும். இந்தக் கரைசலை மூன்று நாட்களுக்கொரு முறை மாற்றவேண்டும்.
  • உயிரியல் கட்டுப்பாடு முறையில் ‘நிசோலின்க்ஸ் தைமஸ்’ என்ற ஒட்டுண்ணியினை 100 முட்டைத் தொகுதிகளுக்கு ஒரு லட்சம் ஒட்டுண்ணிகள் என்ற விகிதத்தில் மாலை நேரங்களில் வெளியிடவும், பீளிச்சிங்பவுடர் மருந்து தெளித்த இரண்டு நாட்கள் கழித்து ஒட்டுண்ணிகள் வளர்ப்பறையில் விடவேண்டும்.
  • பட்டுப்புழுவின் மூன்றாவது பருவத்தில் ஊசி ஈ கொல்லி மருந்து தெளிக்கவும், இதனை பட்டுப்புழுவின் மூன்றாவது பருவத்தின் இரண்டாம் நாளிலும், நான்காம் பருவத்தின் இரண்டாம் நாளிலும், ஐந்தாம் பருவத்தின் இரண்டு, நான்கு மற்றும் ஆறாம் நாளிலும் தெளிக்கவும். ஊசி ஈ மருந்து தெளித்து அரைமணி நேரம் கழித்து உணவளிக்கவேண்டும்.

 

   
 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2014